மதுரை: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ரஞ்சித்தின் உரை முழுவதையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.