×

பாபநாசத்தில் திருமணத்திற்கு மாட்டு வண்டியில் வந்த மணமகன்

வி.கே.புரம் : வி.கே.புரம் அருகே திருமணத்துக்காக மணமகன் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தார். விகேபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்தவர் சிவமுத்து. ஆம்பூரிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வி.கேபுரம் டாணாவைச் சேர்ந்த கல்லிடைக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கால்நடை டாக்டராக பணிபுரியும் அகன்யா என்பவருக்கும் நேற்று பாபநாசத்தில் திருமணம் நடந்தது. இதற்காக மணமகன் சிவமுத்து சிவந்திபுரத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன், மனமகள் இருவரும் கால்நடை டாக்டராக இருப்பதால் வித்தியாசமாக மணமகன் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது அனைவரையும் வியப்படைய செய்தது.

Tags : bridegroom ,wedding ,Papanasam , Papanasam ,Groom ,Bullock cart
× RELATED பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை...