×

திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதம்தோறும் பராமரிப்பு தொகை தர உத்தரவிடக்கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். தன்னுடைய கல்வி செலவுகளை தானே பார்த்துக் கொள்ள முடியவில்லை என காரணம் காட்டி இளம் பெண் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் இளம்பெண் மேஜர் என்பதாலும், மனநலம் பாதித்தவரோ அல்லது உடல் ஊனமுற்றவரோ அல்ல என்பதாலும் அவரது கோரிக்கையை ஏற்க குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். குற்றவியல் சட்டம் 125 ஆவது பிரிவுடன், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 20 ஆவது பிரிவையும் இணைத்து பார்க்கும்போது 18 வயதிற்கு மேற்பட்ட பெண் என்றாலும், திருமணமாகும் வரை மகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு இருக்கிறது என்று இளம்பெண்ணின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 ஆவது பிரிவு, பிள்ளைகள் மைனராக இருக்கும்வரை மட்டுமே பராமரிப்பது பற்றி வரம்பிடுகிறது என்றாலும், மகள்களுக்கு திருமணம் ஆகும்வரை தந்தை பராமரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நீதிமன்றங்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து குடும்பநல நீதிமன்றத்தில் இளம்பெண் புதிதாக மனுதாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : daughters ,Madras High Court , Marriage, daughter, nurture, paternal duty, Madras High Court
× RELATED பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை...