×

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும்: திமுக கோரிக்கை

புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநிலங்களைவியில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பிஎஸ்., படிப்பில் சேர நீட் தேர்வு தடையாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.


Tags : President ,Republican ,Tamil ,DMK , NEET Exam, Rajya Sabha, DMK, Request, Tamil Students, Exclusion
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...