புதுடெல்லி: பாலகோட் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிப்பது தான் நமது நோக்கமாக இருந்தது என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். பாகிஸ்தானின் நோக்கம் நமது ராணுவ தளத்தை தாக்குவதில்தான் இருந்தது எனக் கூறினார். இந்திய விமானப்படை தனது சிவில் போக்குவரத்தை எப்போது நிறுத்தாது என தனோவா தெரிவித்துள்ளார். நல்லநிலையில் உள்ள நமது பொருளாதாரத்திற்கு வான்வழிபோக்குவரத்து முக்கியமானது என்று கூறினார். பாகிஸ்தான் வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது அவர்களின் பிரச்சனை என தெரிவித்தார்.