×

தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சபாநாயகரை நீக்குவதைவிட முதல்வராக உள்ள பழனிசாமியை தான் நீக்க வேண்டும் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேண்டிய அளவு தண்ணீர் இருந்தால் ஏன் மக்கள் சாலைக்கு வந்து போராடப்போகிறார்கள் என ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏதாவது ஒரு குடிநீர் திடத்தையாவது அந்த அரசு கொண்டுவந்துள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார். தண்ணீர் இல்லாமல் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பப் பெற்றோர் தயங்குகின்றனர். ஹோட்டல்களும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித்துறை ஊழல் ஆட்சித்துறையாக மாறிவிட்டதாகவும் திமுக தலைவர் கண்டனம் தெரிவித்தார்.


Tags : Stalin ,DMK ,regime change ,Tamil Nadu , DMK, demonstration, Stalin, Speech
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...