×

கோவையில் வானம் அமைப்பின் மூலம் நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து காட்சி

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வனம் அமைப்பின் மூலம் நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து காட்சி அளிக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு சூலூர் சிரியக்குளத்தின் கரைப்பகுதியில் வன அமைப்பின் மூலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் பின்னர் சொட்டுநீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளை வானம் அமைப்பினர் பராமரித்து வந்தனர்.

இதன் பலனாக தற்போது 20 அடி உயரம் வரை மரங்கள் நன்றாக வளர்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களுக்கு இடையே வனம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. அப்போது சூலூர் வனப்பகுதியில் பறவைகளுக்கு உணவளிக்கும் பழ மரக்கன்றுகளை நடுவது என திட்டமிடப்பட்டது.

Tags : Coimbatore , Coimbatore, forest structure, saplings, view
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு