×

பல்லாவரத்தில் அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய 4 பேரை போலீசார் கைது செய்து அடைத்தனர். சென்னை அடுத்த பல்லாவரம் 8 வார்டு அதிமுக வட்டக செயலாளராக இருப்பவர் விஜயக்குமார். இவர் தனது வார்டில் உள்ள சுந்தரேசன் தெரிவில் பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக தலை, முகம், முகம் கழுத்து பகுதியில் வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றன.

இதில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன், விஜயக்குமார், பிரவீன் ராஜ், நவீன் ராஜ் ஆகிய நான்கு நபர்களுக்கும் விஜயக்குமாருக்கும் தண்ணீர் விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Pallavaram , Pallavaram, AIADMK chief, sickle cut, 4 people, arrested
× RELATED பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள்...