×

பீகாரில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரில் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பீகாரில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இடி, மின்னலுடன் அடித்து வெளுத்த இந்த மழையால் 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதேபோல், காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Bihar , Heavy rains ,10 people in Bihar
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!