உடன்குடி: திருச்செந்தூர் அருகே புன்னைநகர் வனத்திருப்பதி நிவாசபெருமாள் கோயில், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வருஷாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 10 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆழ்வார்திருநகரி ரங்கராமானுஜ ஜீயர் ஆசி வழங்கினர்.
முற்பகல் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6மணிக்கு மேல் மேளதாளத்துடன் கருட வாகனத்தில் நிவாச பெருமாள் வீதியுலா நடந்தது. விழாவில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் உத்தரவின் பேரில் கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.