×

தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் குருக்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பிரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பிரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெருமளவு தங்க முறைகேடு நடந்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து பலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கோவிலில் பணிபுரிந்த முன்னாள் குருக்களான ராஜப்பா குருக்களும்  இது சம்பந்தமாக தேடப்பட்டு வந்தார். இவர் வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தெரிய வந்ததை அடுத்து இந்தியாவிற்குள் வந்தால் இவரை கைது செய்யும் படி இமிகிரேஷன் அலுவலர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று கனடாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திருட்டு காவல்துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு சிலை திருட்டு விசாரிக்கும் கும்பக்கோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவன் ராமானுஜம் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து ராஜப்பா குருக்களை வருகிற 5ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags : priests , Abuse, case, ex-priests arrested in gold
× RELATED உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் காயம்!