நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அந்தோனியார் ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனி நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துக்கொண்டனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோனியாரின் பெரிய திருத்தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டபோது வழிநெடுகிலும் அந்தோனியார் மீது பக்கதர்கள் மலர்களை தூவி வரவேற்றனர். இதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.