×

சேலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு: அதிகாரிகள் மெத்தனம்

சேலம்: சேலத்தில் 8 மணி நேரத்திற்கு முன் உடைந்த குடிநீர் குழாய் இதுவரை சரிசெய்யப்படாததால் சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. சத்திரம் சாலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேட்டூரிலிருந்து ஆத்தூர் செல்லும் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக குழாய் உடைந்தது. குழாய் உடைப்பு குறித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை குழாய் உடைப்பு சரிசெய்யப்படவில்லை. அதிகாரிகள் மெத்தனத்தால் பல ஆயிரம் லிட்டர் நீர் கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : Salem , Salem, drinking water pipe, breakage
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...