×

கிராமங்களில் தங்கி மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி எளிமையாக தரையில் படுத்து உறங்கிய முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடத்தும் கர்நாடக முதல்வர் குமாரசாமி எளிமையாக தரையில் படுத்துறங்கினார். கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி 12 வருடத்திற்கு முன்பு கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமத்தில் நாள் முழுவதும் தங்கியிருந்து குறைகளை கேட்டறிந்தார்.  

காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்த நிலையில் மறுபடியும் கிராம தரிசனத்தை குமாரசாமி தொடங்கினார். நேற்று முன்தினம் யாதகிரி மாவட்டம் சரண்டகி கிராமத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் குருமிட்கல் தாலுகா அளவிலான பொது பிரச்னைக்கு அந்த இடத்திலேயே தீர்வும் காணப்பட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் குமாரசாமி கூறியதாவது:
கர்நாடக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கு வாய்ப்பு இல்லை. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். நானே முதல்வராக இருப்பேன். இந்த அரசு பாதுகாப்பாக உள்ளது. கூட்டணி அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.
சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவகவுடா எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது எனக்கு தெரியாது.

அதுபற்றி நான் கருத்து கூறமாட்டேன். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதை மனதில் கொண்டு தேவகவுடாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றார். நேற்று முன்தினம் முதல்வர் யாதகிரியில் அரசு பள்ளியில் ஒரு பெட்ஷூட் மட்டுமே தரையில் விரித்து படுத்து தூங்கினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஹெலிகாப்டர்களில் விழாவுக்கு வரும் ஆடம்பர முதல்வர்களின் மத்தியில் கர்நாடக முதல்வரின் இந்த எளிமை அனைவராலும் பாராட்டப்படுகிறது. சிலர் இவரது நடவடிக்கைக்கு எதிரான கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : ground , Villages, people staying, show, simplicity, ground, sleeping, Chief Minister Kumaraswamy
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...