×

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர் காதலியுடன் நள்ளிரவில் போரிஸ் ஜான்சன் சண்டை: செல்போனில் பதிவு செய்த பக்கத்து வீட்டுக்காரர்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக வாய்ப்பு உள்ள போரிஸ் ஜான்சன், தனது வீட்டில் நள்ளிரவில் காதலியுடன் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி எம்பி.யாக இருப்பவர் போரிஸ் ஜான்சன். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்து, 2 மனைவிகளையும் விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது அவர் கேரி சைமன்ட்ஸ் என்ற காதலியுடன் வசித்து வருகிறார். தெற்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரியுடன் தங்கியிருந்த அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென சண்டை நடக்கும் சத்தம் கேட்டது. அதை அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

அப்போது, வீட்டுக்குள் கேரி சைமன்ட்ஸ் பொருட்களை தூக்கி வீசும் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே போ...’, என்னை தொடாதே...,’ என போரிஸ் ஜான்சனை பார்த்து அந்த பெண் கூறுவதும் செல்போனில் பதிவாகியுள்ளது. போரிஸ் ஜான்சன் தனது காதலியிடம், ‘எனது லேப்டாப்பை ஏன் தொடுகிறாய்?’ என கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து நடந்த தகராறில், எனது சோபாவில் ஏன் ஒயினை கொட்டினாய்? நீ ரொம்ப மோசமானவன்... உனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. பணத்தை பற்றிக் கூட கவலைப்படாமல் இருக்கிறாய்...’ என கேரி சைமன்ட்ஸ் கேட்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தனது செல்போனில் பதிவையும் அவர்களிடம் கொடுத்துள்ளார்.சற்று நேரத்தில் போலீசார் போரிஸ் ஜான்சன் வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தகராறு அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


Tags : Boris Johnson ,fight ,neighbor ,UK , Boris Johnson, the next Prime Minister of England, at midnight
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது