×

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து செல்லும்: காங்கிரஸ் சிறுபான்மை துறை கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா வெளியிட்ட அறிக்கை:
இந்திய மொழிவழி மாநில பிரிவினையை எதிர்த்த ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் மட்டுமே போதும் என்று கூறப்பட்டிருந்தது. அதை, இப்போது பாஜ அமல்படுத்த முயற்சிக்கிறது. இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், பன்முக ஜனநாயகத்திற்கும் எதிரானது மட்டுமல்ல, ஆபத்தான பாசிசத்தை நோக்கி நாட்டை அழைத்துச்செல்லும்.

இந்து என்ற ஒரு சொல்லுக்குள் பல்வேறு வழிபாட்டுமுறை பல்வேறு உணவு பண்பாட்டு கலாச்சார முறை இருக்கிறது. அதையெல்லாம் மறுத்து ஒரே மதம் ஒரே பண்பாடு எனக்கூறுவது இந்து பன்முகத்தன்மைக்கு எதிரானது. முத்தலாக் இஸ்லாமிய ஷரியத்தில் இல்லாத சட்டத்தை இருப்பதாக கூறி அதை ஒழிக்கப்போவதாக கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது மாபெரும் அபத்தம். சமூக உளவியலை புரிந்து கொண்டு அரசு செயல்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Country ,Election ,Dictatorship ,Congress Minority Department , One country, one election, country dictatorship, Congress, minority sector, severe condemnation
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!