×

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது குறித்து தனது கருத்து பற்றி தவறான பிரச்சாரம் - துரைமுருகன் அறிக்கை

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது பற்றி தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். சில பத்திரிகைகள், ஊடகங்கள் தன் கருத்தை திரித்து, சென்னைக்கு நீர் கொண்டு செல்ல துரைமுருகன் எதிர்ப்பு என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதை கண்டிக்கிறேன் என துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.காவேரி கூட்டு குடிநீர் திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரை பல ஊர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai , Chennai, Duraimurugan, Drinking Water
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...