×

மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது தாமதம் ஏற்படும் என்று அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகு சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ஜூன் மாதம் சம்பளம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஏ பிரிவில் ஒரு லட்சம் பேரும், பி பிரிவில் 3 லட்சம் பேரும் மத்திய அரசில் பணியாற்றுகின்றனர்.

Tags : Announcement ,Central Government ,A&P , Salary, Central Government, Delay
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...