×

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவகாற்று வலுத்துள்ளதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேடசந்தூரில் 7 செ.மீ. மழை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செ.மீ. மழையும், பெரியாறு அணை, நடுவட்டம், வால்பாறை ஆகிய இடங்களில் தலா செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Thundershowers , Tamil Nadu, Puducherry, Rain, Chennai, Meteorological Center,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17...