சென்னை: தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏராளமான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து வருகின்றன. மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கும் அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.