சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த யாகத்தில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கலந்து கொண்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ், அவரது உறவினர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், சத்யநாராயணராவ் கூறுகையில், ரஜினி கட்சி தொடங்குவதும், முதல்வராக வருவதும் தெய்வத்தின் செயல். ரஜினி அரசியலுக்கு வரட்டும் நல்லது செய்யட்டும் என்றார்.