சென்னை: ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் இறந்தவர்கள், காயம்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் விவரத்தை போலீசார் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விவரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் கே.கே.ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.