மதுரை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெட், ஸ்லெட் சங்க பொதுச் செயலாளர் தங்க முனியாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.