மதுரை : இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து உள்ளதால் கைதாவாரா ரஞ்சித்..? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.