டெல்லி : தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க ஓ பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.