×

அகில இந்திய அளவிலான கண்காட்சி: 90 புகைப்பட கலைஞர்களின் படைப்புக்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை லலித் கலா அகாடமியில் அகில இந்திய அளவிலான 90 புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சிற்பங்கள், மலைகள், பண்டிகைகள், வனவிலங்கு மற்றும் பறவைகள் உள்ளிட்ட அனைத்தும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதை தொடர்ந்து இக்கண்காட்சியில் 90 புகைப்பட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மொத்தமாக 660 புகைப்படங்கள் வந்துள்ளதாகவும், அதில் சிறந்த புகைப்பட கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகும் 250 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பெரியளவிலான புகைப்படங்களாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் குறித்த பொதுமக்களின் சந்தேகங்கள்,  படங்களுக்கான வரைவுகள், ஒளிவமைப்புகள் குறித்து நேரில் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கண்காட்சியை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.


Tags : India Exhibition: 90 Photographers' Works , All India Exhibition, Chennai, 90 Photographers, Works, Participation
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...