ஹைதரபாத் : தெலுங்கானாவில் 38 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரூ. 80,500 கோடி மதிப்பில் கோதாவரி ஆற்றின் குறுக்கே 35 கிலோமீட்டர் நீளத்துக்கு காலேஸ்வரம் அணை கட்டப்பட்டுள்ளது. 16.37 டிஎம்சி கொள்ளளவு கொண்ட காலேஸ்வரம் அணையை முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளார்.