×

நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து 5 லட்சம் நகைகள் அபேஸ்: 2 பெண்களுக்கு வலை

பெரம்பூர்: நகைக்கடையில் வாடிக் கையாளர் போல் நடித்து 5 லட்சம் நகை களை  அபேஸ்  செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின் றனர். வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வருண்குமார் (37). திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்த 2 பெண்கள், ‘‘மோதிரம், கம்மல் வாங்க வேண்டும், மாடல் காட்டுங்கள்’’ என்று கூறியுள்ளனர். அதன்படி, வருண்குமார் கடையில் இருந்த நகை மாடல்களை காண்பித்துள்ளார். நீண்ட நேரம் அவற்றை பார்த்த பெண்கள், எந்த மாடலும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.

இரவு கடையை மூடுவதற்கு முன்பு நகைகளை வருண்குமார் சரி பார்த்துள்ளார். அப்போது 5 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் கடைக்கு வந்த 2 பெண்கள், தமது கவனத்தை திசை திருப்பி, நகைகளை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் வருண்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களை தேடி வருகின்றனர்.


Tags : Jeweler, customer, jewelry
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை