பாண்டா: உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் புல்சி மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் மணல் எடுக்க வரும் லாரி ஓட்டுனர்களை மிரட்டி ரூ.50 பறித்து கொள்வது வழக்கமாகும். இந்நிலையில் லாரி ஓட்டுனர் அருண்குமார்(22) என்பவர் மணல் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் ரூ.50 கேட்டு அவரை வழிமறித்துள்ளனர்.
ஆனால் அருண்குமார் ரூ.30 வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் ரூ.30 அவர்களிடம் கொடுத்துள்ளார். ரூ.20 குறைவாக கொடுத்ததன் காரணமாக பாதுகாவலர்கள் மற்றும் அருண்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதுகாவலர்கள் அருண்குமார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குண்டுபாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அருண்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.