கும்பகோணம்: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய் ஆற்றில் கலந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் கசிவை ஓஎன்ஜிசி அதிகாரிகள் சீர் செய்தனர்.