×

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

புதுடெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்று பிற்பகலில் பல இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Bank of Bengal , Bengal Sea, Windfall, Rain, Indian Weather Center
× RELATED பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்...