மதுரை: திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 65 பேரும் இந்திய குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறியுள்ளார். குடியுரிமை விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் மீது மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.