ஈரோடு: விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தூர் புதுப்பாளையம் கிராமத்தில் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக தென்னை மரங்களை வெட்ட வந்த அதிகாரிகளை சுற்றிவளைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளை நிலங்களுக்கு செல்லும் வாயில் கதவை பூட்டி அதிகாரிகளை உள்ளே விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.