விருதாச்சலம்: விருதாச்சலம் அரசு பள்ளியில் குடிநீர் பிரச்சனை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ஆசிரியர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்மாபுரம் அரசு பள்ளியில் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாக வந்த தகவலையடுத்து செய்தியாளர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். செய்தியாளர்களை பார்த்த ஆசிரியர்கள் பள்ளியில் செய்தி சேகரிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். மேலும், செய்தியாளர்களை தாக்கிய 5 ஆசிரியர்கள் அவர்களது கேமராவையும் பறித்ததால் பள்ளி ேவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.