சென்னை: நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டதாக பாக்யராஜ் அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் புரோகித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நடிகர் சங்கத் தேர்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஆளுநர் தெரிவித்ததாக கூறியுள்ளனர். மேலும், விஷால் அணியினர் பொய்களை சொல்லி வருவதாகவும், அவர்களது அணிக்குள் ஒற்றுமை இல்லை எனவும் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.