புதுடெல்லி: ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது, ஊழலை ஒழிப்பதில் தமது அரசு உறுதிபூண்டு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் அவர், கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.