புதுடெல்லி: முதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகளவில் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றி வரும் அவர், வாழ்க்கை சுமையை எளிமையாக்க நமது அரசு பாடுபட்டு வருகிறது. வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள். புதிய மக்களவையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புதியவர்கள் என்று கூறியுள்ளார்.