×

போச்சம்பள்ளி அருகே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி, திருப்பத்தூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கக்கான வாகனங்கள் செல்கின்றன. தற்போது டூவிலர்கள் பயன்பாடு அதிகரித்து, போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. போச்சம்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் லாரிகள் அதிகளவில் கூடுதல் சுமைகளை ஏற்றிச்செல்கிறது. அவ்வாறு அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், சாலைகளை அடைத்துக்கொண்டு செல்கிறது. இதனால், லாரியை பின்தொடர்ந்து செல்லும் டூவிலர்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் லாரிகளின் பின்னால் செல்லும் போது, கயிறுகள் அறுந்து விழுந்து விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது. இதனை அறியாமல், அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் பின்னால் ஆபத்தை உணராமல் டூவிலர்கள் மற்றும் பஸ்கள் சென்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pochampalli , Pochampalli, lorry, accident
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...