சென்னை: பணமோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்ஜ்ராஜ்(65) என்ற விசாரணை கைதி உயிரிழந்துள்ளார். சிறையில் ஜார்ஜ்ராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது. பணமோசடி வழக்கில் ஜூன் 12ம் தேதி வேப்பேரி போலீசார் ஜார்ஜ்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.