×

மராட்டியத்தின் அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் என்ற அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி

மும்பை : மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் ஒருவர்தான் பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிடான சாமானாவில் அக்கட்சியின் 53வது ஆண்டுவிழாவை முன்னிட்டு எழுதப்பட்ட தலையங்கத்தில் தான், இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிவசேனா ஆண்டு விழாவை முன்னிட்டு மராட்டிய மாநில சட்டமன்ற கட்டிடத்திற்கு காவி வண்ண சாயம் பூசுமாறு அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கட்சியின் 54வது ஆண்டு விழாவின் போது சிவசேனாவின் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் தான் மராட்டியத்தின் முதல்வராக இருப்பார் என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே,தமது மகன் ஆதித்யா தாக்ரேவை   அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த தலையங்கம் அதனை உறுதி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தான் என்ற சாமானாவின் தலையங்கம் பாஜக - சிவசேனா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.


Tags : BJP ,announcement ,chief minister ,Shiv Sena ,Maharashtra , BJP, Shiv Sena, Shiv Sena, Samana, Maratham
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...