டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தில் ஓம்பிர்லாவை மக்களவை சபாநாயகராக பெற்றதில் பெருமை கொள்கின்றேன் என மோடி கூறியுள்ளார். மக்களவையின் சிறந்த சபாநாயகராக ஓம்பிர்லா விளங்குவார் என்று மோடி கூறினார். கோட்டா தொகுதியில் கல்வி நிலையங்கள் நிறைந்தவையாக விளங்க ஓம்பிர்லா காரணம் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.