புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தலைமையாசிரியர் சரியாக வராததால் அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் பூட்டு போட்டனர். கொல்லன்வாயல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் பூட்டு போட்டனர். 5ம் வகுப்பு வரை 33 மாணவர்கள் படிக்கும் நிலையில் தலைமை ஆசிரியை, ஒரு ஆசிரியர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.