×

சினிமா நட்சத்திரங்களையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டேன்: பாடகர் எஸ்.பி.பி பேச்சு

சென்னை: யோகி  பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: இன்றைக்கு தண்ணீர், பிளாட்டினம், தங்கத்துக்கு  ஈடான ஒரு பொருளாக மாறிவிட்டது. அரை பக்கெட் குடிநீர் கிடைக்காமல் அரைநாள் நான் அவதிப்பட்டேன். தண்ணீர் பற்றாக்குறை இதுவரை இல்லாத  அளவுக்கு கடுமையாக இருக்கிறது. இதற்கு காரணம் நாம்தான். நீரை சேமிக்காமல்  விட்டது நமது தவறுதான். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எல்லோரும் இலையில்  சாப்பிடுங்கள், தட்டு கழுவும் தண்ணீர் மிச்சமாகும். தினம் ஒரு ஆடை அணியாமல்  வாரத்துக்கு 2 ஆடை அணியுங்கள், சலவை செய்யும்  தண்ணீர் மிச்சமாகும்.  

தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை குடித்துவிட்டு மீதி தண்ணீரை பாட்டிலோடு  விட்டுச் செல்லாதீர்கள். எனக்கு ெதரிந்த யோசனையை உங்களுக்கு ெசால்கிறேன்.  இனியாவது நாம் கவனமாக இருந்து அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க  வேண்டும். இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார். ஆக சினிமா நட்சத்திரங்களையும் தண்ணீர் பஞ்சம் விட்டு வைக்கவில்லை என்றால் சென்னையில் உள்ள சாமான்ய மக்களின் நிலை குறித்து கேட்கவா வேண்டும்.



Tags : cinema stars ,singer ,SPB , Movie stars, water famine, singer sbp
× RELATED ‘மக்கள் பாடகர்’ கத்தார் மறைவு