×

ஆட்டோ டிரைவர் தீக்குளித்து சாவு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை சிங்குவார் அக்கரஹார தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (55). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேனி மற்றும் மகன் ஒருவர் உள்ளார். கருணாகரன் கடந்த 10 ஆண்டுகளாக அதே  பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். ஆனால், அங்கு சரியாக ஊதியம் கொடுக்காததால் வேலையில் இருந்து நின்றார்.

இந்த நிறுவனத்தில் கருணாகரனுக்கு சம்பள பாக்கி தர வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், கருணாகரன் அந்த நிறுவனத்திற்கு பலமுறை சென்று சம்பள பாக்கியை கேட்டு வந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் பணம் தரவில்லை என்று  கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ ைவத்து கொண்டார். படுகாயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : death ,Auto Driver Fire , Auto ,driver, Die , fire
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை