×

மனைவி, 2 மகன்களை கொன்று விட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை: அமெரிக்காவில் பரிதாபம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சேர்ந்தவர்  தனது மனைவி, 2 மகன்களை கொன்றுவிட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் வெஸ்ட் டெஸ்மொய்னஸ் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சந்திரசேகர். கடந்த சனிக்கிழமை இவர், இவருடைய   மனைவி சுங்காரா (41) மற்றும் இரண்டு மகன்கள் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 4 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.   சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தடயவியல் சோதனைகளின் முடிவில் சந்திர சேகர் தனது மனைவி, 2 மகன்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Tags : sons ,Indian ,US , Wife , 2 sons ,killed, America
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி