×

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு நிபா வைரஸ் அறிகுறி: புதுவை ஜிப்மரில் தீவிர சிகிச்சை

காட்டுமன்னார்கோவில்:  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே செட்டிகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (75). இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவூரில் கடந்த 8 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருள்பிரகாசம் (37). மேலபூவிழந்தநல்லூர் கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி கேரளாவில் ராமலிங்கத்தை பாம்பு கடித்ததாக அவரது மகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 16ம் தேதி அருள்பிரகாசம் கேரளா சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தை ராமலிங்கத்தை மேலபூவிழந்தநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்தார்.

மறுநாள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ராமலிங்கத்துக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே 16 பேர் கொண்ட மருத்துவக்குழு மேலபூவிழந்தநல்லூரில் முகாமிட்டு கிராமத்தினரை பரி சோதித்து வருகின்றனர்.



Tags : Kalaamannaarkovoy ,Puduvai Zibbar , Kilimanorkoil, Kulithakali, Niba Virus, Punitha Jibmer,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...