திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மகனும், தொழில் அதிபருமான பினோய் கோடியேரி மீது பீகாரை சேர்ந்த இளம்பெண் பலாத்கார புகார் கூறியது ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கோடியேரி பாலகிருஷ்ணன். முன்னாள் அமைச்சர் ஆவார். இவருக்கு பினோய் கோடியேரி, பினீஷ் கோடியேரி என்று 2 மகன்கள் உள்ளனர். பினீஷ் கொடியேரி மலையாள சினிமாவில் நடித்துள்ளார். பினோய் கொடியேரி துபாயில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் துபாயில் பார் டான்சராக இருந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், மும்பை அந்தேரியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், துபாயில் பார் டான்சராக இருந்தபோது, திருமணம் ெசய்து கொள்வதாக கூறி, கடந்த 2009 முதல் 2018ம் ஆண்டு வரை, பினோய் கோடியேரி தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதில் தனக்கு 8 வயதில் குழந்தை உள்ளது. எனவே பினோய் கோடியேரி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பினோய் ேகாடியேரி மீது பலாத்காரம், நம்பிக்கை துரோகம், மிரட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடங்கி உள்ளது எனவும், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரி ஷைலேஷ் வசல்வார் கூறினார். இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.