சென்னை: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை வேந்தராக பாலகிருஷ்ணனை நியமிக்க ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழக வேந்தர் இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறி, நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.