சென்னை: பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் மனு அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இளைஞர்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.