×

சிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: ஏராளமான சுற்றுலா பயணிகள் தவிப்பு..!

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சங்தாங்-லச்சென்- தாங்கு இடையே பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஏற்கெனவே லேச்சன் பகுதியில் இருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ஸிமா என்ற இடத்தில் மட்டும் 250 முதல் 300 சுற்றுலாப் பயணிகள் வரை சிக்கிக் கொண்டு நீர் சூழ்ந்த விடுதிகளில் இருந்த வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவுவதால், லச்சென், லச்சங், டிசோங்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : floods ,province ,tourist ,Sikkim , Sikkim, Flood, and Tourists
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...